பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிராவில் வெள்ள நிலவரம் குறித்து முதல்வருடன் பிரதமர் பேசினார்

Posted On: 22 JUL 2021 9:18PM by PIB Chennai

பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அம்மாநில முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார்.

"மகாராஷ்டிராவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பேசினேன். நிலைமையை சீரமைக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்," என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

 

-----

 



(Release ID: 1737907) Visitor Counter : 225