மத்திய அமைச்சரவை

சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையில் ஒத்துழைப்பிற்காக இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUL 2021 4:07PM by PIB Chennai

சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையில் ஒத்துழைப்பிற்காக இந்திய குடியரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் டென்மார்க் முடியரசின் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பயன்கள்:

இந்திய குடியரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் டென்மார்க் முடியரசின் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே சுகாதார துறையில் கூட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஒத்துழைப்பை இந்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்குவிக்கும்.

இரு நாட்டு மக்களின் பொது சுகாதார நிலையை மேம்படுத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1735491) வருகையாளர் எண்ணிக்கை : 396