சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

3 கோடியைத் கடந்தது: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

Posted On: 12 JUL 2021 11:24AM by PIB Chennai

இந்தியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியைக் கடந்துள்ளது.

இதுவரை மொத்தம் 3,00,14,713 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39,649 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.22 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நம் நாட்டில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 37.73 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 48,51,209 முகாம்களில் 37,73,52,501 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 12,35,287 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 15-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளன.

நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,50,899 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.46 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 14,32,343 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 43,23,17,813 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.32 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.59 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 21 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 35 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734718

*****

 

(Release ID: 1734718)



(Release ID: 1734752) Visitor Counter : 226