பிரதமர் அலுவலகம்
திரு கல்யாண் சிங் அவர்கள் விரைவில் குணமடைவதற்காக பிரார்த்தனை செய்யும் எண்ணற்ற மக்களுடன் பிரதமர் இணைகிறார்
Posted On:
09 JUL 2021 10:13AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, திரு கல்யாண் சிங் அவர்களின் பேரனுடன் பேசினார். நோய்வாய்ப்பட்ட தலைவர் விரைவில் குணமடைவதற்காக பிரார்த்தனை செய்தார். திரு கல்யாண் சிங் அவர்களுடனான தனது கலந்துரையாடல்களை நினைவு கூர்ந்த பிரதமர், அவருடன் பேசுவது எப்போதுமே ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது என்றார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்ட தொடர்ச்சியான சுட்டுரைகளில் தெரிவித்துள்ளதாவது:
” திரு கல்யாண் சிங் அவர்கள் விரைவில் குணமடைவதற்காக இந்தியா முழுவதும் எண்ணற்ற மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். நேற்று திரு ஜே பி நட்டா, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பலர் அவரைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றனர். நான் அவரது பேரனுடன் பேசினேன், அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன்.
திரு ஜே பி நட்டாவுடனான உரையாடலின் போது, திரு கல்யாண் சிங் ஜி என்னை நினைவு கூர்ந்தார் என்பதை அறிந்து நான் மிகவும் நெகிழ்ந்தேன். திரு கல்யாண் சிங் அவர்களுடன் நான் உரையாடிய பல நினைவுகள் உள்ளன. அந்த நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டன. அவருடன் பேசுவது எப்போதுமே ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. ”
*****
(Release ID: 1734105)
Visitor Counter : 238
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada