பிரதமர் அலுவலகம்

உத்தராகண்ட் முதல்வராக பொறுப்பேற்றதற்கு திரு புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUL 2021 6:42PM by PIB Chennai

உத்தராகண்ட் முதல்வராக பொறுப்பேற்றதற்கு, திரு புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று பதவிஏற்றுக்கொண்ட மற்றவர்களுக்கும், அவர் வாழ்த்து தெரிவித்தார்.

சுட்டுரையில், பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘இன்று பதவி ஏற்றுக்கொண்ட திரு புஷ்கர் தாமி மற்றும் இதர அனைவருக்கும் வாழ்த்துகள். உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு அவர்கள் பணியாற்றுவதால், இந்த குழுவுக்கு மிகச்சிறந்த வாழ்த்துகள்.’’  என குறிப்பிட்டுள்ளார்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1732667) வருகையாளர் எண்ணிக்கை : 291