மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
யோக அறிவியல் குறித்த பட்டயப் படிப்பை சர்வதேச யோகா தினத்தன்று திரு சஞ்சய் தோத்ரே அறிமுகப்படுத்தினார்
Posted On:
21 JUN 2021 5:40PM by PIB Chennai
யோக அறிவியல் குறித்த தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனத்தின் பட்டயப் படிப்பை சர்வதேச யோகா தினமான இன்று மத்திய கல்வி இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே அறிமுகப்படுத்தினார்.
இப்படிப்பின் சுய கற்பித்தல் பாடத்தை அமைச்சர் வெளியிட்டார். இத்தகைய படிப்புகளை வழங்குவதற்காக தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனத்தை அமைச்சர் பாராட்டினார்.
கொவிட்டின் போது யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், பல்வேறு வேலைவாய்ப்புகளையும் அது உருவாக்கி உள்ளதாக கூறினார். யோக அறிவியல் குறித்து இன்று தொடங்கப்பட்டுள்ள படிப்பை பயில்பவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக மாறுவார்கள் என்று அவர் கூறினார். ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினமாக அறிவிப்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்த பாராட்டத்தக்க முயற்சிகள் குறித்து அமைச்சர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனத்தின் தலைவர், இந்த இரண்டு வருட பட்டய படிப்பின் முதல் வருடத்தில் ஐந்து பாடங்கள் உள்ளது என்றும் யோகா கற்பித்தல் பயிற்சி குறித்து அவை கற்றுக் கொடுக்கும் என்றும் கூறினார். இரண்டாம் வருடத்தில் யோகா மருத்துவ முறை குறித்த ஐந்து பாடங்கள் கற்றுத் தரப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729098
-------
(Release ID: 1729164)