பிரதமர் அலுவலகம்

மாநில உருவாக்கம் தினத்தில் தெலுங்கானா மக்களுக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

Posted On: 02 JUN 2021 9:35AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மாநில உருவாக்கம் தினத்தை முன்னிட்டு தெலுங்கானா மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், "மாநில உருவாக்கம் தினத்தில் தெலுங்கானா மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த மாநிலம், தனித்துவமான கலாச்சாரத்தையும், பல துறைகளில் சிறந்து விளங்கும் கடின உழைப்பாளிகளான மக்களையும் பெற்று ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மக்களின் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் எனது பிரார்த்தனைகள்"  என்று கூறியுள்ளார்.


*****************



(Release ID: 1723685) Visitor Counter : 165