சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் நிவாரண சர்வதேச உதவிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரைவாக விநியோகம்

Posted On: 18 MAY 2021 5:00PM by PIB Chennai

சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் கொவிட்-19 மருத்துவ பொருட்களை, மத்திய அரசு கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் பெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல், மே 17ம் தேதிவரை, மொத்தம் 11,325 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள், 8,526 வென்டிலேட்டர்கள், 6.1 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் பெறப்பட்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு சாலை மார்க்கமாகவும், வான் வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் ஜிலெட், இந்தோ-சுவிஸ் வர்த்தக சபை ஆகியவற்றிடமிருந்து கடந்த 16/17ம் தேதிகளில் பெறப்பட்ட முக்கிய பொருட்கள்

வென்டிலேட்டர்கள்: 1056

ரெம்டெசிவிர்: 57,893.

இவற்றை மாநிலங்கள் /யூனி்யன் பிரதேசங்களுக்கு திறம்பட ஒதுக்கீடு செய்து, விநியோகிப்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறதுஇதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரிவாக கண்காணித்து வருகிறது. இவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக  ஒரு பிரத்தியேக பிரிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரிவு கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. இதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை உருவாக்கப்பட்டு கடந்த 2ம் தேதி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719623

-------



(Release ID: 1719720) Visitor Counter : 186