பிரதமர் அலுவலகம்

திரு ஜியானி ஜோகிந்தர் சிங் வேதாந்தியின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 15 MAY 2021 11:45PM by PIB Chennai

திரு ஜியானி ஜோகிந்தர் சிங் வேதாந்தியின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “திரு ஜியானி ஜோகிந்தர் சிங் வேதாந்தி அவர்கள் சிறந்த கல்வியாளராகவும், பணிவானவராகவும் திகழ்ந்தார். தன்னலமற்ற மனித சேவையின் வெளிப்பாடாக அவரது வாழ்க்கை அமைந்தது. கருணை நிறைந்த மற்றும்  இணக்கமான சமூகத்தை உருவாக்குவதற்காக அவர் பாடுபட்டார். அன்னாரது மறைவினால் மிகவும் துயரடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

*******************



(Release ID: 1719066) Visitor Counter : 165