பிரதமர் அலுவலகம்

பைசாகி திருநாளை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 13 APR 2021 9:05AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, பைசாகி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “பைசாகி திருநாள், அனைவரின் வாழ்க்கையிலும், மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும். இந்தப் பண்டிகை இயற்கையுடனும், கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளுடனும் சிறப்பான தொடர்பைக் கொண்டிருக்கிறது. நமது வயல்வெளிகள் செழித்து நிறையட்டும். நமது பூமியைப் பாதுகாப்பதற்கு இந்தத் திருநாள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1711333) வருகையாளர் எண்ணிக்கை : 233