நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
உணவு மானியத்துக்கு இந்தாண்டு ரூ.1,25,217.62 கோடி வழங்கிஅரசு சாதனை: இந்த நிதியாண்டில் ரூ. 2,97,196.52 வழங்கப்படும்
प्रविष्टि तिथि:
19 FEB 2021 2:25PM by PIB Chennai
உணவு மானியமாக மத்திய அரசு இந்தாண்டு ரூ.1,25,217.62 கோடி வழங்கியுள்ளது. இந்த நிதியாண்டில் ரூ. 2,97,196.52 வழங்கப்படவுள்ளது.
இதில் ரூ.1,16,653.96 கோடி பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கும், ரூ.24, 841.56 கோடி ஹரியானா விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.
குறைந்த பட்ச ஆதரவு விலையை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் முறை நாடு முழுவதும் ஏற்கனவே உள்ளது. இம்முறையை பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 2015-16 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறை ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் ஏற்கனவே உள்ளது.
நெல் கொள்முதலில் ஒரு பகுதி பணம் மின்னணு வழியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக அனுப்பப்பட்டது.
பிரதமரின் கிசான் திட்டத்தில் மேற்கொண்டது போல், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699361
**
(रिलीज़ आईडी: 1699427)
आगंतुक पटल : 269