வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

கொவிட்-19-க்குப் பிந்தைய காலகட்டத்தில் அனைவரும் விரும்பும் சுற்றுலா, வர்த்தகத் தலமாக வடகிழக்குப் பகுதிகள் வளர்ச்சி அடையும்: அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை

Posted On: 24 JAN 2021 4:17PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கடந்த 23-ஆம் தேதி தொடங்கி வைத்த வடகிழக்கு கவுன்சிலின் 69-வது கூட்டம் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. வட கிழக்கு மாகாணங்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் வளர்ச்சிநிலை குறித்தும் இந்த இரண்டு நாள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

நிறைவு விழாவில் பேசிய மத்திய வட கிழக்கு மாகாணங்களுக்கான இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்நாட்டின்  வளர்ந்த மாநிலங்களுக்கு இணையாக வடகிழக்கு பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்தினார். கடந்த ஆறு வருடங்களில் பிரதமரின் தலைமையில் வடகிழக்கு பகுதிகளில் துரித வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தப் பகுதிகளின் வளர்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருப்பதாகவும், இதுவரை எட்டியுள்ளதைவிட அதிகளவில் வளர்ச்சி அடைய வேண்டுமென்று பிரதமர் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19-க்குப் பிந்தைய காலகட்டத்தில் அனைவரும் விரும்பும் சுற்றுலா மற்றும் வர்த்தகத் தலமாக வடகிழக்குப் பகுதிகள் வளர்ச்சி அடையும் என்றும், அங்கு அதிகம் விளையும் மூங்கில், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய தூணாக விளங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691882

**********************



(Release ID: 1691987) Visitor Counter : 131