பிரதமர் அலுவலகம்

பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் ஜனவரி 25-ஆம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்

Posted On: 24 JAN 2021 3:27PM by PIB Chennai

பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்  விருது பெற்றவர்களுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 ஜனவரி 25 அன்று நண்பகல் 12 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுவார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், பொதுசேவை, மற்றும் வீர தீர மிக்க துறைகளில் தலை சிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள் கொண்ட குழந்தைகளுக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால சக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய குழந்தைகள் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.

பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்-2021 பால சக்தி விருதுகளின் பல்வேறு பிரிவுகளுக்கு நாடுமுழுவதும் 32 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

**********************



(Release ID: 1691883) Visitor Counter : 185