பிரதமர் அலுவலகம்

பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில், பிரதமர் புகழஞ்சலி

Posted On: 17 JAN 2021 11:02AM by PIB Chennai

பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில், அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் விடுத்துள்ள சுட்டுரையில், ‘‘பாரத ரத்னா எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும், அரசியலிலும், அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் அவர் பல முயற்சிகளைத் தொடங்கினார்.  அவரது பிறந்தநாளில், எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம்’’ என குறிப்பிட்டுள்ளார். 

-------



(Release ID: 1689343) Visitor Counter : 102