சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கடந்த 13 நாட்களாக 30 ஆயிரத்துக்கும் குறைவான புதிய கொரோனா தொற்றுகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது

Posted On: 26 DEC 2020 10:44AM by PIB Chennai

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், புதிய கொரோனா பாதிப்புகளும், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையையும்இறப்புகளின் எண்ணிக்கையையும் குறைந்து வருவதும் நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இதுவரை குணமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 97.5 இலட்சத்தை (97,40,108) நெருங்கி வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை உலகத்திலேயே அதிகமாகும்.

கடந்த 13 நாட்களாக 30 ஆயிரத்துக்கும் குறைவான புதிய கொரோனா தொற்றுகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,81,667 ஆகும். மொத்த பாதிப்புகளில் இது 2.77 சதவீதம் ஆகும்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குணமடைதல் விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 273 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 29 நாட்களாக பாதிப்புகளின் எண்ணிக்கையை விட குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 274 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683751

------



(Release ID: 1683860) Visitor Counter : 112