சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய விருது, கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஒத்திவைப்பு

Posted On: 02 DEC 2020 5:05PM by PIB Chennai

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய விருதுகொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்  அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களும், ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, தேசிய தேர்வாணையத்தின் பார்வைக்கு அனுப்பப்படும். இதற்கான கூட்டம், நேற்று (டிசம்பர் 01, 2020) நடப்பதாக இருந்தது. எனினும் கொவிட்-19 பரவல் காரணமாக இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைந்த பிறகு தேசிய தேர்வு ஆணையத்தின் கூட்டம் நடைபெற்று அது குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677689

**********************



(Release ID: 1677760) Visitor Counter : 172