பிரதமர் அலுவலகம்

ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தீபாவளி அன்று விளக்கேற்ற பிரதமர் வேண்டுகோள்

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2020 6:38PM by PIB Chennai

நமது நாட்டை துணிச்சலோடு காக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த தீபாவளியின் போது நாமும் ஒரு விளக்கை ஏற்றுவோம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

"நமது நாட்டை துணிச்சலோடு காக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த தீபாவளியின் போது நாமும் ஒரு விளக்கை ஏற்றுவோம். நம்முடைய வீரர்கள் வெளிப்படுத்தும் சிறப்பான தீரத்துக்கான நம்முடைய நன்றியை வார்த்தைகளால் கூறி விட முடியாது. எல்லைகளில் காவல் காப்பவர்களின் குடும்பங்களுக்கும் நாம் நன்றி உடையவர்களாக இருக்கிறோம்," என்று டிவிட்டர் பதிவு ஒன்றில் பிரதமர் கூறியுள்ளார்.

**********************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1672740) வருகையாளர் எண்ணிக்கை : 237