ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

யூரியா அல்லாத உரங்கள் விற்பனையில் தேசிய உரங்கள் லிமிடெட் வளர்ச்சி

Posted On: 03 NOV 2020 11:11AM by PIB Chennai

யூரியா அல்லாத உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளது.

டிஏபி, எம்ஓபி, என்பிகே மற்றும் சல்பர் அடிப்படையிலான உரங்கள் ஆகியவற்றை உபயோகிக்கும்படி விவசாயிகளை தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. இதனால், இப்போதைய நிதி ஆண்டின் முதல் 7 மாதங்களில் யூரியா அல்லாத உரங்கள் விற்பனையில் இந்த நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிறுவனத்தின் சல்பர் அடிப்படையிலான உரமான பெண்ட்டோனைட் சல்பர் விற்பனை 237% வளர்ச்சி பெற்றிருப்பது பதிவாகி உள்ளது. ஒற்றை சூப்பர் பாஸ்பேட்(எஸ்எஸ்பி) விற்பனை வளர்ச்சி 133% ஆக பதிவாகி இருக்கிறது.

தேசிய உரங்கள் லிமிடெட்டின் பானிபட் ஆலையில் தயாரிக்கப்படும் பெண்ட்டோனைட் சல்பர் 2020 ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 11,730 மெட்ரிக் டன் வெளி விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3,478 மெட்ரிக் டன் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் எஸ்எஸ்பி 6.32 மெட்ரிக் டன் விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு, 14,726 மெட்ரிக் டன் விற்பனை எட்டப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் காணலாம்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669673

*************



(Release ID: 1669724) Visitor Counter : 186