நிதி ஆணையம்

நிதி ஆணையத்தின் முந்தைய தலைவர்களுடன் 15வது நிதி ஆணையம் உரையாடல்

Posted On: 28 OCT 2020 3:53PM by PIB Chennai

பதினைந்தாவது நிதி ஆணைய கூட்டத்தின் இறுதியில் அதன் தலைவர் திரு என் கே சிங் மற்றும் உறுப்பினர்கள், 12வது நிதி ஆணையத்தின் தலைவர் டாக்டர் சி ரங்கராஜன், பதின்மூன்றாவது நிதி ஆணையத்தின் தலைவர் டாக்டர் விஜய் கேல்கர் ஆகியோருடன் மெய்நிகர் வாயிலாக உரையாடினர்.

கூட்டத்தில் பேசிய திரு என் கே சிங், இந்த பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரை நமது கடந்த 20 ஆண்டு கால கூட்டாட்சி வரலாற்றின் வெளிப்பாடாக அமைகிறது என்று குறிப்பிட்டார்.

வரும் 30 ஆம் தேதி 2021- 26  ஆண்டுகளுக்கான இறுதி அறிக்கையை 15வது நிதி ஆணையம் சமர்ப்பிக்க உள்ள நிலையில், அதற்கான பணியில் இந்த ஆணையம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

நிதி ஆணையத்தின் முந்தைய தலைவர்கள் கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் கடுமையான சவால்களுக்கு இடையே சிறப்பாக பணியாற்றி வரும் 15வது நிதி ஆணையத்தின் உறுப்பினர்களைப் பாராட்டினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668124

**********************



(Release ID: 1668160) Visitor Counter : 1583