சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறையும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மனநலம்- கொவிட்-19க்கும் அப்பால் என்ற சர்வதேச கருத்தரங்கம் நாளை நடைபெறுகிறது

Posted On: 07 OCT 2020 3:30PM by PIB Chennai

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறையும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமும் இணைந்து நடத்தும் மனநலம்- கொவிட்-19க்கும் அப்பால் என்ற சர்வதேச கருத்தரங்கம் காணொலி காட்சி வாயிலாக நாளை,  (8.10.2020) நடைபெறுகிறது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் தாவர் சந்த் கெலாட் தொடங்கி வைக்கும் இந்தக் கருத்தரங்கில், ஆஸ்திரேலிய-இந்திய நிறுவன தலைவர் பேராசிரியர் கிரேக் ஜெப்ரி, உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கருத்தரங்கில்  கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல்கள் குறித்து நிபுணர்கள் விவாதிப்பார்கள்

இந்த கருத்தரங்கின் நேரலையை கீழ்காணும் இணைய தள முகவரியில் காணலாம் https://youtu.be/GcNKczaqVsQ

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பில் ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662302

---- 



(Release ID: 1662336) Visitor Counter : 170