எரிசக்தி அமைச்சகம்

2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகளை குறிப்பிட்டு பவர் பைனான்ஸ் நிறுவனம் இந்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 29 SEP 2020 3:18PM by PIB Chennai

செயல்திறன் சார்ந்த ஒப்பந்தம் ஒன்றில் இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்துடன் பவர் பைனான்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், 2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்திய அரசின் செயலாளர் (எரிசக்தி) திரு சஞ்சீவ் நந்தன் சகாய் மற்றும் பவர் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஆர் எஸ் தில்லான் ஆகியோர் எரிசக்தி அமைச்சகம் மற்றும் பவர் பைனான்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பல்வேறு செயல் திறன் சார்ந்த அளவுகோல் களோடு சேர்த்து ரூபாய் 36 ஆயிரம் கோடி இலக்கை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் பவர் பைனான்ஸ் நிறுவனம், அதை நிரூபிக்கும் வண்ணம் இந்திய அரசிடமிருந்து அதிக மதிப்பு குறியீடுகளைப் பெற்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660015

 

*****



(Release ID: 1660059) Visitor Counter : 141