ஆயுஷ்

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளில் ஆயுஷ் நடைமுறைகள் சேர்ப்பு

Posted On: 14 SEP 2020 4:00PM by PIB Chennai

கொவிட் பாதிப்புக்கு  பிந்தைய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 13ம் தேதி வெளியிட்டது. இந்த நெறிமுறைகள், வீட்டு தனிமையில் இருக்கும் கொவிட் நோயாளிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கானது அல்ல. தீவிர பாதிப்பு நோயாளிகளின் குணமடையும் காலம் மிக நீண்டதாக இருக்க வாய்ப்புள்ளது. கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள், மீண்டும் முழு ஆரோக்கியத்தை பெற, ஆயுஷ் நடைமுறைகளை  பின்பற்றும் படி இந்த நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

இப்போதைக்கு, கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள், இருமல், தொண்டை வறட்சி போன்ற அறிகுறிகளை தொடர்ந்து தெரிவிக்க வேண்டும்.

கொவிட்-19 பாதிப்பில் இருந்து குணமடைந்த பின்பும், பாதிக்கப்பட்டவர்கள் முக கவசம் அணிவது, கை சுத்தம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். போதிய அளவில் வெந்நீர் குடிக்க வேண்டும். ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துதுரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நடைபயிற்சியுடன் யோகா, பிராணாயாமம் போன்ற எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1654033

*************



(Release ID: 1654376) Visitor Counter : 229