சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 சமீபத்திய தகவல்கள்: குணமடைபவர்கள் எண்ணிக்கையை அதிக அளவில் இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது

प्रविष्टि तिथि: 13 SEP 2020 11:02AM by PIB Chennai

தொடர்ந்து ஒரு நாளைக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையை இந்தியா கண்டு வருகிறது. 

கவனமான, ஒன்றிணைந்த, துரிதமான மற்றும் திறன் வாய்ந்த நடவடிக்கைகளின் மூலம் அதிக அளவிலான பரிசோதனைகள், சிறப்பான கண்காணிப்பு மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை மூலம் இது சாத்தியமாகி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 78,399 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்து 3,702,595ஐ தொட்டுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 77.88 சதவீதமாக உள்ளது.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள், நாட்டின் 58 சதவீத குணமடைதல்களுக்கு காரணமாக உள்ளன.

மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் சுமார் 13 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653733


(रिलीज़ आईडी: 1653825) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam