சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் அண்மைத் தகவல்கள்
குணமடைந்தோர் எண்ணிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் முன்னேற்றறம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 75,000 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை சுமார் 34 லட்சம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2020 11:45AM by PIB Chennai
கடந்த 24 மணி நேரத்தில், குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 74,894 ஆக உயர்ந்துள்ளது.
இத்துடன் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33,98,844 -ஐ எட்டியுள்ளது. குணமடைந்தோர் வீதம் 77.77 %-மாக உயர்ந்துள்ளது. வார அடிப்படையிலான குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஜூலை 3வது வாரத்தில் 1,53,118 ஆக இருந்த குணமடைந்தோர் எண்ணிக்கை, செப்டம்பர் முதல் வாரத்தில் 4,84,068 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 8,97,394.
சிகிச்சை பெறுபவர்களில் 61%பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,115 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652545
(வெளியீட்டு அடையாள எண்: 1652607)
வருகையாளர் எண்ணிக்கை : 236
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam