பிரதமர் அலுவலகம்

கேசவானந்த பாரதியின் மறைவுக்கு, பிரதமர் இரங்கல் தெரிவித்தார்; சமூக சேவையில் அவரது பங்கை நினைவுகூர்ந்தார்

Posted On: 06 SEP 2020 3:56PM by PIB Chennai

கேசவானந்த பாரதி அவர்களின் மறைவை ஒட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்தார்.

 

"தவத்திரு கேசவானந்த பாரதி அவர்களின் சமூக சேவையையும், பின்தங்கி உள்ளவர்களுக்கு அதிகாரமளிப்பதில் அவரது பங்களிப்பையும் நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்போம். இந்தியாவின் வளமான கலாச்சாரத்திலும், சிறப்பான அரசியல் அமைப்பிலும் அவர் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். தலைமுறைகளுக்குத் தொடர்ந்து அவர் ஊக்கமளிப்பார். ஓம் சாந்தி," என்று பிரதமர் கூறினார்.

 

***

 



(Release ID: 1651832) Visitor Counter : 138