பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
'பெருந்தொற்றின் போது நல்ல ஆளுகை பழக்கங்கள்' என்னும் நிகழ்ச்சியில் வளரத்துடிக்கும் மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் மத்திய அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் நாளை உரையாடுகிறார்
Posted On:
03 SEP 2020 4:42PM by PIB Chennai
மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், 'பெருந்தொற்றின் போது நல்ல ஆளுகை பழக்கங்கள்' என்னும் நிகழ்ச்சியில் வளரத்துடிக்கும் மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் நாளை உரையாடுகிறார்.
இந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் நிறைவு விழாவில் காணொலி காட்சி மூலம் அமைச்சர் உரையாற்ற இருக்கிறார். இந்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளை சேர்ந்த தலைவர்கள், மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இதில் பங்கேற்கிறார்கள்.
நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி திரு அமிதப் காமத்தும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார். தேசிய நல்ல ஆளுகை மையம் மற்றும் நிதி ஆயோக்கால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651022
***
MBS/GB
(Release ID: 1651068)