உள்துறை அமைச்சகம்

காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு ( பிபிஆர்&டி) தனது பொன் விழாவை ஆகஸ்ட் 28-ஆம் தேதி கொண்டாடுகிறது

Posted On: 27 AUG 2020 4:56PM by PIB Chennai

காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (பிபிஆர்&டி) தனது பொன் விழாவை நாளை  அதாவது 2020 ஆகஸ்ட் 28-ஆம் தேதி கொண்டாடுகிறது. மத்திய உள்துறை இணையமைச்சர் திரு.ஜி.கிஷன்ரெட்டி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். உள்துறை செயலர் திரு.அஜய்குமார் பல்லா சிறப்பு விருந்தினராக இருப்பார். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி மெய்நிகர் முறையில் நடைபெறும். பிபிஆர்&டி தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி காணப்படும். அதன் துணை அமைப்புகள், மாநில காவல்துறை, சிஏபிஎப் ஆகியவை காண்பதற்கு வீடியோ இணைப்பு அளிக்கப்படும்.

காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு ( பிபிஆர்&டி), 1970 –ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம்தேதி, மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின்படி தொடங்கப்பட்டது. காவல் துறையை சிறப்பாக மேம்படுத்துவது, காவல்துறைப் பிரச்சினைகள் பற்றி விரைவான, முறையான ஆய்வை மேற்கொள்வது, காவல் துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உத்திகளைக் கடைப்பிடிப்பது ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இது ஏற்படுத்தப்பட்டது.

 

*****



(Release ID: 1649129) Visitor Counter : 185