பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிரா ராய்கட்டில் கட்டடம் இடிந்ததால் நேரிட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் துயரம்
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2020 10:28AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட், மஹதில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து துயரம் தெரிவித்துள்ளார்
“மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட், மஹதில் கட்டடம் இடிந்து விழுந்ததை அறிந்து துயருற்றேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக எனது எண்ணங்கள் உடனிருக்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். விபத்து நடந்த இடத்தில், உள்ளூர் நிர்வாகத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அனைத்து உதவிகளையும் அளித்து வருகின்றனர்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1648408)
வருகையாளர் எண்ணிக்கை : 269
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam