பிரதமர் அலுவலகம்

தூய்மை கணக்கெடுப்பு 2020-ல் முன்னிலை வகிக்கும் நகரங்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 20 AUG 2020 8:32PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, தூய்மை கணக்கெடுப்பு 2020-ல் முன்னிலை வகிக்கும் நகரங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

     “தூய்மை கணக்கெடுப்பு 2020-ல் முன்னிலை வகிக்கும் அனைத்து நகரங்களுக்கும் எனது நல்வாழ்த்துகள். மற்ற நகரங்களும் இதனால் ஊக்கம் பெற்று, தூய்மை நிலையை உறுதி செய்யும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.  இந்த போட்டி மனநிலை, தூய்மை இந்தியா இயக்கத்தை வலுப்படுத்துவதோடு, லட்சக்கணக்கானவர்களுக்கும் பயனளிக்கும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

*****



(Release ID: 1647528) Visitor Counter : 162