சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த மத்திய அமைச்சர்கள் குழுவின் 19-வது கூட்டம், டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடைபெற்றது.


உலகளவில் இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது, இந்த வீதம் படிப்படியாக குறைந்து வருகிறது: டாக்டர் ஹர்ஷ் வர்தன்.

கடந்த 24 மணி நேரத்தில், சாதனை அளவாக, 6, 42, 588 கோவிட்-19 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

Posted On: 31 JUL 2020 3:38PM by PIB Chennai

கோவிட் -19 குறித்த மத்திய அமைச்சர்கள் குழுவின் 19-வது கூட்டம், புது தில்லியில் இன்று (31 ஜுலை, 2020), மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில், காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றதுவெளியுறவுத்துறை அமைக்சசர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி, கப்பல் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரசாயணம், உரங்கள் துறை இணையமைச்சர் திரு.மன்சுக் லால் மண்டாவியா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு.அஸ்வினி குமார் சௌபே, மற்றும் உள்துறை இணையமைச்சர் திரு.நித்யானந்த் ராய் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு குறித்த தற்போதைய நிலவரம், மத்திய அமைச்சர்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.  “10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பதன் மூலம், குணமடைவோர் வீதம் இதுவரை இல்லாத அளவாக, 64.54 சதவீதம் என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது. இதன் மூலம், தற்போது 33.27 சதவீதம்  அல்லது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில்  மூன்றில் ஒரு பகுதியினர்  மட்டுமே மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது தெரிய வந்துள்ளதுஇந்தியாவில் உயிரிழப்போர் வீதம் படிப்படியாக குறைந்து வருவதுடன், தற்போது 2.18 சதவீதம் என்ற அளவில் இருப்பதன் மூலம், உலகில் உயிரிழப்பு குறைவான நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதுஎன  டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.   

இந்தியாவில் காணப்பட்ட நோய்த் தொற்றின் தீவிரம் குறித்துப் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன்,  “தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கையில் 0.28 சதவீதம்  நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டர் பொருத்தப்பட்ருப்பதுடன்,  1.61 சதவீதம் நோயாளிகளுக்குத் தான் தீவிர சிகிச்சைப் பிரிவின் உதவியும்,  2.32 சதவீதம்  நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறதுஎன்றார்.   இந்தியாவில்தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்இன்றைய நிலவரப்படி, மொத்தம் 1,131 ஆய்வுக் கூடங்கள் (911-அரசு ஆய்வகங்கள் மற்றும் 420 தனியார் ஆய்வுக் கூடங்கள்) வாயிலாக, கடந்த 24 மணி நேரத்தில், ஒரு சாதனை அளவாக, இந்தியாவில் 6,42,588 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுஇதன் மூலம், பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை, 1.88 கோடியைத் தாண்டியுள்ளது

தனிநபர் முழு உடல் பாதுகாப்பு கவசங்கள், முகக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஹைட்ராக்சி குளோரோ குயின் போன்ற மருந்துகளை, பல்வேறு பிரிவுகள் மூலம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் அளவும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக, அமைச்சர்கள் குழுவிடம் எடுத்துரைக்கப்பட்டதுமருத்துவ உபகரணங்கள் விநியோகத்தைப் பொறுத்தவரைஇதுவரை மொத்தம் 268.25 லட்சம் என்.95 முகக் கவசங்கள், 120.40 லட்சம் தனிநபர் முழு உடல் பாதுகாப்பு கவசங்கள், மற்றும் 1083.77லட்சம் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள்மாநில/ யூனியன் பிரதேச மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.  

தினசரி தொற்றுப் பாதிப்பு, உலகின் 10 முன்னணி நாடுகளில் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு மற்றும் இறப்பு வீதம் குறித்த உலகளாவிய ஒப்பீடு குறித்து, தேசிய நோய்த் தடுப்பு மைய இயக்குநர் டாக்டர் சுஜீத் கே. சிங் விவரித்தார்இந்தியாவின் ஒட்டுமொத்த குணமடைவோர் வீதம் 64.54 சதவீதம் ஆக உள்ள நிலையில்தலைநகர் தில்லியில் தான் அதிகபட்சமாக, 89.08 சதவீதம் குணமடைந்துள்ளனர்அதற்கு அடுத்தபடியாக ஹரியானா (79.82%) உள்ளதுகர்நாடகா மாநிலத்தில் தான் மிகக் குறைந்த அளவாக 39.36 சதவீதம் மட்டும் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர்கள் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டதுஇந்தியாவில் உள்ள நகரங்கள் / கிராமப்புறங்களில்பகுதிவாரியாக நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிகிச்சை பெறுவோர் உள்ளிட்ட விவரம் குறித்தும் அமைச்சர்கள் குழுவிற்கு எடுத்துரைக்கப்பட்டதுதொற்று பாதிப்பு மிக அதிகமாக உள்ள 12 மாநிலங்களின் (மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத், தெலங்கானா, பீகார், ராஜஸ்தான் மற்றும் அஸ்ஸாம்) தொற்று அதிகரிப்பு வீதம்பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் வீதம்; மற்றும் சிகிச்சை பெறுவோர்  மற்றும் இறப்பு வீதம் அதிகம் உள்ள 20 மாவட்டங்கள்  மற்றும் இந்த மாவட்டங்களின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்த விவரத்தைதேசிய நோய்த் தடுப்பு மைய இயக்குநர், அமைச்சர்கள் குழுவினருக்கு விவரித்தார்.  

நோய்த் தொற்று பாதிப்பு மிக அதிகமாக உள்ள மாவட்டங்கள் / நகரங்களில் இறப்பு வீதத்தைக் குறைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்த அவர், புனே, தானே, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கூறினார்கண்காணிப்பைக் கடுமையாக்குவதன் மூலம், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் பாதிப்பு நிலவரத்தைத் திறம்படக் கையாளுதல்; ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை அளவை அதிகரித்தல்; வீடு, வீடாகச் சென்று தொற்று பாதிப்பு உள்ளவர்களைக் கண்டறிவதைத் தீவிரப்படுத்துதல்; நோய்த் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவோர்/ பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை அதிகரித்தல், தொற்று பாதிப்பு உடையவர்களை கண்காணிப்பதற்கான நிலையான நடைமுறைகளுடன் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மற்றும் திட்டமிட்ட ரத்தப் பரிசோதனைகள் மூலம், உண்மையான பாதிப்புகளைக் கண்டறிதல் போன்றவற்றுக்கான செயல்திட்டத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவரமாக எடுத்துக் கூறப்பட்டது.   திட்டமிட்ட  தகவல் அளித்தல், கற்பித்தல் மற்றும் தொடர்பு கொள்ளுதல் பிரச்சாரம் மூலம் மக்களின் உணர்வுகளை அறிந்துசமுதாய பங்கேற்புடன் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது

நோய் பாதிப்பு மிதமாக உள்ள மாவட்டங்கள் / நகரங்களில், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளிலிருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுததல்; உள்ளூரில் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுதொற்று பாதிப்பை இயன்றவரை வெகுசீக்கிரமாக அடையாளம் காணுதல்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் சமுதாய பங்கேற்பு போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.  

                                                                   *****



(Release ID: 1642625) Visitor Counter : 222