உள்துறை அமைச்சகம்

தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு (என்டிஆர்எப்) தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்து நன்கொடைகள் பெற மத்திய அரசு அனுமதி

Posted On: 18 JUL 2020 4:52PM by PIB Chennai

எந்த ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்து, பேரிடர் மேலாண்மைக்காக, தேசியப் பேரிடர் மீட்பு நிதிக்கு தொகை / மானியங்களை பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-இன் பிரிவு 46(1) (b)_இன் படி, பெறுவதற்கான விதிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தனிநபர் அல்லது நிறுவனங்கள் பின்வரும் வழிமுறைகளின் படி பங்களிப்பை/ நன்கொடைகளை வழங்கலாம்;

a.         பொருளியல் வழிமுறை மூலம்; ‘’பிஏஓ (செயலகம்), மத்திய உள்துறை அமைச்சகம்’’ என்ற பெயரில் புதுதில்லியில் பெறத்தக்க வகையில் அனுப்ப வேண்டும். அனுப்பும் ஆவணத்தின் பின்புறத்தில்என்டிஆர்எப்-க்கு  பங்களிப்பு/நன்கொடை’’ என்று தனிநபர்கள் குறிப்பிடலாம்.

 

b.         ஆர்டிஜிஎஸ்/நெப்ட்/ யுபிஐ மூலம்; நன்கொடைகளை ஆர்டிஜிஎஸ்/நெப்ட் மூலமாகவும் அனுப்பலாம். “என்டிஆர்எப்-க்கு  பங்களிப்பு/நன்கொடை’’ என்று குறிப்பிட வேண்டும். அதனை கணக்கு எண். 10314382194, ஐஎப்எஸ்சி கோட் - SBIN0000625, பாரத ஸ்டேட் வங்கி, சென்ட்ரல் செக்ட் கிளை, புதுதில்லி, என்பதில் டெபாசிட் செய்ய வேண்டும்.

c.         Bharatkosh portal https ://bharatkosh.gov.in  மூலம்; நெட் பாங்கிங்- பயன்படுத்தி, டெபிட் அட்டைகள், கிரெடிட் அட்டைகள், யுபிஐ மூலம் பின்வரும் வழிமுறைகளில் அனுப்பலாம்;

 

i.          முகப்புப்  பக்கத்தில் ‘’குயிக் பேமண்ட் ‘’ என்ற ஆப்சனில் https://bharatkosh.gov.in என்பதை கிளிக் செய்யவும்.

ii.         அடுத்த பக்கத்தில், அமைச்சகத்தை  “உள்துறை’’ என்பதை தேர்வு செய்யவும். நோக்கத்தில்  “என்டிஆர்எப்-க்கு  பங்களிப்பு/நன்கொடை’’ என்று குறிப்பிடவும். பணம் செலுத்த வலைதளம் மேலும் வழிகாட்டும்.

 

*****



(Release ID: 1639687) Visitor Counter : 254