உள்துறை அமைச்சகம்

மிசோரம் நிலநடுக்கத்திற்கு பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அம்மாநில முதல்வருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்

மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்

Posted On: 22 JUN 2020 3:33PM by PIB Chennai

மிசோரம் மாநிலத்தில்  நில நடுக்கம் ஏற்பட்ட பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, அம்மாநில முதல்வர் திரு.ஷோரம்தங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். அம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரின் நலனுக்காக பிரார்த்திப்பதாகத் தெரிவித்த திரு.அமித் ஷா, `மத்திய அரசு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று நான் உறுதியளித்தேன்’ என்று கூறினார்.

உதவியளிப்பதாக உறுதியளித்த பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவுக்கும் மிசோரம் மாநில முதல்வர் திரு. ஷோரம்தங்கா நன்றி தெரிவித்தார்.



(Release ID: 1633319) Visitor Counter : 193