மத்திய பணியாளர் தேர்வாணையம்

சிவில் சர்வீஸ் தேர்வுகள் - 2019 தேர்வர்களுக்கான ஆளுமைத்திறன் தேர்வு, 20 ஜூலை 2020 முதல் நடைபெறும்.

Posted On: 05 JUN 2020 4:23PM by PIB Chennai

கோவிட்-19 காரணமாக நிலவும் சூழ்நிலைகள் குறித்துp பரிசீலனை செய்வதற்காக சிறப்புk கூட்டம் ஒன்றை மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (UPSC) இன்று நடத்தியது. மத்திய அரசும் பல்வேறு மாநிலங்களும் அறிவித்துள்ள பொதுமுடக்கம் நீக்கப்படுதல் மற்றும் தளர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேர்வுகள்/ நியமனத் தேர்வுகள் ஆகியவற்றுக்கான திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையை வெளியிட ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்வுகள் நேர்முகத்தேர்வுகள் இவை பற்றிய திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை விவரங்கள், யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு, 2019 எழுதிய, எஞ்சியுள்ள தேர்வர்களுக்கான ஆளுமைத்திறன் தேர்வுகள் 20 ஜூலை 2020 முதல் நடைபெறும். தேர்வர்களுக்கு தனித்தனியாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.

 

ஊழியர் சேமநல நிதி அமைப்புக்கான EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத் தேர்வுக்கான புதிய தேதி ஆணையத்தின் இணையதளத்தில் 2021 தேர்வுகள்/ நியமனத் தேர்வுகள் ஆகியவற்றுக்கான அட்டவணை வெளியிடப்படும் போது சேர்த்து வெளியிடப்படும்.



(Release ID: 1629733) Visitor Counter : 187