நிதி ஆணையம்

15வது நிதி ஆணையத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டம் ஏப்ரல் 23 - 24 தேதிகளில் நடைபெறுகிறது

Posted On: 20 APR 2020 7:08PM by PIB Chennai

பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பொருளாதார ஆலோசனைக் குழு ஏப்ரல் 23-24 தேதிகளில் கூடவிருக்கிறது. இது 15 வது நிதி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீ என்.கே.சிங் தலைமையிலான இணையவழிக் கூட்டமாகும். நிதி ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஐந்து உறுப்பினர்களான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், டாக்டர் சாஜித் இசட் சினாய், டாக்டர் ப்ராச்சி மிஷ்ரா, திரு. நீல்காந்த் மிஷ்ரா மற்றும் டாக்டர் ஓம்கார் கோஸ்வாமி ஆகியோர் ஏப்ரல் 23ம்  தேதியன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்வர். இந்தக் குழுவின் இதர உறுப்பினர்கள் அடுத்த நாளான ஏப்ரல் 24ம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

ஆலோசனைக் குழு கூட்டத்தில்  கீழ்கண்ட அம்சங்கள் விவாதிக்கப்படும்

  • 2020-21 மற்றும் 2021-22 ஆண்டுகளில் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியில் நாட்டில் தற்போது பரவியுள்ள தொற்று நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள். காலப்போக்கில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மை.
  • நடப்பு நிதியாண்டிலும் அடுத்த ஆண்டிலும் வரி நிலைமை மற்றும் வருவாய் குறித்த முன்கூட்டிய அனுமானங்களுக்கான வாய்ப்புகள்.
  • பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பொதுச்செலவுகளை எவ்வகையில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த கருத்துகள் விவாதிக்கப்படலாம்.


(Release ID: 1616773) Visitor Counter : 124