குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

போட்டிகளை சமாளிக்க புதுமை சிந்தனைகள், இறக்குமதி பொருள்களை உள்நாட்டில் தயாரிப்பதில் கவனம் - தொழில் துறையினருக்கு அமைச்சர் கட்கரி வேண்டுகோள்

Posted On: 17 APR 2020 6:20PM by PIB Chennai

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மாற்று பொருள்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டியது அவசியம் என்று  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. கட்கரி வலியுறுத்தியுள்ளார். தொழில்நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். தொழில் வளர்ச்சியில் ஆராய்ச்சி, புதுமை சிந்தனை மற்றும் தர மேம்பாடு ஆகியவை முக்கிய பங்காற்றும் என்றும் குறிப்பிட்டார். இளம் தலைவர்கள் அமைப்பு,  இந்தியா சிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் அமைப்பு மற்றும் வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நாக்பூரில் இருந்து காணொலிக் காட்சி மூலம்  இன்று அமைச்சர்        திரு. கட்கரி கலந்துரையாடினார்.

பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பிரச்சினைகளில் பின்வரும் விஷயங்கள் இருந்தன:

செயல்பாட்டுக்கான காலக்கெடுவை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும், எம்.எஸ்.எம்.இ.களுக்கான செயல்பாட்டு மூலதனக் கடன் வரம்பை உயர்த்துதல், மாதாந்திர கட்டணங்கள் மீதான கட்டணங்களை ரத்து செய்தல், கணினி வன்பொருள் துறை உள்ளிட்ட துறைகளை அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் சேர்த்தல்,, பொது முடக்கநிலை காலத்தில் அரசு ஊழியர் காப்பீடு. மற்றும் வைப்புநிதி கையிருப்புகளில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு செலவிட்ட தொகைகளுக்கு வரிகளை பூஜ்யமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

இந்தக் கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக அமைச்சர் திரு. கட்கரி உறுதியளித்தார்.


(Release ID: 1615706)