உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

ஊரடங்கின் போது, நாடு முழுவதும் 418 டன் மருத்துவப் பொருள்களை விநியோகிக்க 247 உயிர்காக்கும் உடான் விமானங்கள் இயங்கப்பட்டன

Posted On: 16 APR 2020 7:26PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு உதவும் வகையில், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் அத்தியாவசிய மருத்துவ சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ளும் உயிர்காக்கும் உடான் சேவைக்காக, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சம்பந்தப்பட்ட முக்கிய பிரிவினர்களை உள்ளடக்கிய முக்கிய குழுவை அமைத்துள்ளது. சரக்கு மையம் மற்றும் இதர இடங்களுக்கான சரக்குப் போக்குவரத்து சேவைகள் 2020 மார்ச் மாதம் 26-ஆம் தேதி தொடங்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கான உதவித் தலைமை இயக்குநர் (ஊடகம்) திரு. ராஜீவ் ஜெயின் கூறியுள்ளார். தேசிய ஊரடங்கின்போது, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டுள்ள உயிர்காக்கும் உடான் முன்முயற்சி பற்றி திரு. ராஜீவ் ஜெயின்,  இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார். உயிர்காக்கும் உடான் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப் படை, தனியார் நிறுவனங்களின் 247 விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதில் 154 விமானங்கள் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர் நிறுவனங்களுக்குச் சொந்தமானதாகும். இதுவரை, 418 டன்னுக்கும் அதிகமாக சரக்குகளை இந்த விமானங்கள் 2.45 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து கொண்டு சென்றுள்ளன.



(Release ID: 1615335) Visitor Counter : 141