தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

விரைவு அஞ்சலில் மருந்துகளை அனுப்ப உயர் முன்னுரிமை தருமாறு மத்திய அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் அஞ்சல் துறை செயலாளரைப் பணித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 APR 2020 6:49PM by PIB Chennai

முடக்கநிலை காலத்தில், விரைவு அஞ்சலில் மருந்துகள் அனுப்புவதற்கு உயர்முன்னுரிமை தருவதை உறுதி செய்யுமாறு மத்திய தகவல்தொடர்பு, சட்டம் மற்றும் நீதித்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத், அஞ்சல் துறை செயலாளரை அறிவுறுத்தியுள்ளார். அஞ்சல் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மருந்துகள் அனுப்புவதிலும், பெறுவதிலும் யாருக்கும் எந்த சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் இன்று பகிர்ந்த ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்


(வெளியீட்டு அடையாள எண்: 1614070) வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam