பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம், இந்திய கம்பெனி செகரட்டரிகள் கழகம் மற்றும் இந்திய காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் கழகம் ஆகியவை கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான பிரதமரின் நிவாரண நிதிக்கு (PM CARES) ரூ.28.80 கோடி அளித்துள்ளன.

Posted On: 10 APR 2020 9:21AM by PIB Chennai

இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம், இந்திய கம்பெனி செகரட்டரிகள் கழகம் மற்றும் இந்திய காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் கழகம் ஆகியவை கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான பிரதமரின் நிவாரண நிதிக்கு (PM CARES) ரூ.28.80 கோடி அளிக்க முன்வந்துள்ளன. இந்த அமைப்புகள் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் நிபுணர்களின் அமைப்புகளாக உள்ளன. கோவிட்-19  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிக்கு இத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிவாரணம் வழங்கும் நோக்கில், அவசர சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (PM CARES Fund) 2020 மார்ச் 28 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட நோக்கத்துக்கான இந்த நிதி, கோவிட்-19 நோய்த் தொற்றால் உருவாகும் எந்த ஒரு அவசர நிலை அல்லது துயரமான சூழ்நிலையையும் சமாளித்தல் மற்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

நன்கொடைகளின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது (ரூ. கோடியில்):

 வ. எண்

அமைப்பு

அமைப்பின் பங்களிப்பு

உறுப்பினர்கள் / அலுவலர் பங்களிப்பு

மொத்தம்

1

இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம்

15.00

6.00

21.00

2

இந்திய கம்பெனி செகரட்டரிகள் கழகம்

5.00

0.25

5.25

3

இந்திய காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் கழகம்

2.50

0.05

2.55

 

 

மொத்தம்

22.50

6.30

28.80

 



(Release ID: 1612794) Visitor Counter : 170