எரிசக்தி அமைச்சகம்

மின் விளக்குகளை அணைக்குமாறு பிரதமர் விடுத்த வேண்டுகோளுக்கு திரளான ஆதரவு: மத்திய மின்துறை அமைச்சர்

Posted On: 06 APR 2020 6:15PM by PIB Chennai

கொவிட்-19 நோய்க்கு எதிராக தேச ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், மின் விளக்குகளை அணைத்து, மற்ற வி விளக்குகளை ஏற்றுமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்புக்கு, மிகுந்த ஆதரவு இருந்ததாக மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் கூறியுள்ளார். 5. 4. 20 20 அன்று நிகழ்ந்த மின் விளக்குகளை அணைத்து, மற்ற விளக்குகளை ஒளிரச் செய்யலாம் என்ற இயக்கத்தின் போது, பவர் கிரிட் மின் தொகுப்புகளைக் கையாள்வதை நேரடியாகக் கண்காணித்த பிறகு இவ்வாறு கூறியுள்ளார்.

அன்றைய தினம் இரவு எட்டு நாற்பத்தொன்பது (20.49hrs) மணியிலிருந்து, இரவு ஒன்பது ஒன்பது (2109hrs) மணி வரையிலான நேரத்தில், மின்சாரத் தேவை 117300 மெகாவாட்டில்இருந்து 85300 மெகாவாட்டாக குறைந்தது. அதாவது ஒரு சில நிமிடங்களிலேயே, 32000 மெகாவாட் தேவை குறைந்துள்ளது. தேசிய தேவையின் அளவில் இவ்வாறு 32 ஆயிரம் மெகாவாட் குறைந்தது, பிரதமரின் அழைப்புக்கு தேசம் கொடுத்துள்ள திரளான ஆதரவை வெளிப்படுத்துகிறது என்று தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், நாம் அனைவரும், ஒட்டுமொத்த தேசமும் பிரதமருடன் இணைந்து நிற்கிறோம். இந்தியா பிரதமருடன் இணைந்து நிற்கிறது என்று கூறியுள்ளார்.


(Release ID: 1611884)