பிரதமர் அலுவலகம்

செயல்பாடுகள் தடுக்கப்பட்ட சூழ்நிலையின் நடைமுறைகளை மக்கள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள்

Posted On: 23 MAR 2020 11:19AM by PIB Chennai

நாட்டில் முடக்கப்பட்ட சூழ்நிலைகள் குறித்த நடைமுறைகளை மக்கள் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று பொது மக்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முடக்கப்பட்ட சூழ்நிலையை மக்கள் ஒழுங்காகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

****



(Release ID: 1607728) Visitor Counter : 198