பிரதமர் அலுவலகம்
ஞாயிறன்று நடைபெறவுள்ள மக்கள் ஊரடங்கை ஆதரிக்கும் பல்வேறு தரப்பினருக்கும் பிரதமர் நன்றி
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAR 2020 8:53PM by PIB Chennai
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக ஞாயிறன்று நடைபெறவுள்ள மக்கள் ஊரடங்குக்கு ஒன்று சேர்ந்து ஆதரவளிக்கும் பல்வேறு தரப்பு மக்களின் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மக்கள் ஊரடங்குக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களும் செல்வாக்கு மிக்கவர்களும், பல்வேறு அமைப்புகளும், ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடே ஒன்று சேர்ந்து இதனைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
|
நாட்டைப் பெருமிதம் கொள்ளச்செய்த பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மின்னல்வேக ஓட்டப்பந்தய வீரர்கள், கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றுசேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனை நாம் செயல்படுத்த வேண்டும்.
https://t.co/S6Bv8LwskIhttps://t.co/wkJxiQD46v
-நரேந்திர மோடி (@narendramodi), மார்ச் 20, 2020.
|
(வெளியீட்டு அடையாள எண்: 1607465)
வருகையாளர் எண்ணிக்கை : 261