பிரதமர் அலுவலகம்
வடகிழக்குப் பகுதியின் அழகினை பிரதமர் புகழ்ந்துரைத்தார்
மக்கள் வடகிழக்குப் பகுதிகளுக்கு தாங்கள் மேற்கொண்ட பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிருமாறு கேட்டுக்கொண்டார்.
இடுகை இடப்பட்ட நாள்:
08 FEB 2019 9:55AM by PIB Chennai
வடகிழக்கு பகுதியின் கண்கவர் அழகினை பிரதமர் திரு. நரேந்திர மோடி புகழ்ந்துரைத்தார்.
“நீங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் அல்லது கண்கவர் காட்சிகள் ஏதும் உங்களிடம் இருக்கிறதா?”, என்று பிரதமர் கேட்டார்
அந்த புகைப்படங்களை மக்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #MagnigicentNortheast. (அற்புதமான வடகிழக்குப் பகுதி) என்ற ஹஷ்டாக்குடன் பகிருமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். “நான் எனது பக்கத்திலும் சில புகைப்படங்களைப் பகிர்கிறேன்”, என்று அவர் கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1563459)
வருகையாளர் எண்ணிக்கை : 124