பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
அறிவியல் சரிபார்ப்பு அடிப்படையில் இ20 பெட்ரோலின் பாதுகாப்பையும் செயல்திறனையும் அரசு மீண்டும் உறுதிசெய்துள்ளது
प्रविष्टि तिथि:
23 JUL 2026 3:05PM by PIB Chennai
எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டமானது, நித்தி ஆயோக், வாகன உற்பத்தியாளர்கள், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம், இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம், இந்திய பெட்ரோலிய நிறுவனம் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கி, கட்டம் கட்டமாக, அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட, கலந்தாய்வு நடைமுறை மூலமே செயல்படுத்தப்பட்டுள்ளது.
இ20 பெட்ரோலின் பயன்பாடு தொடர்பாக, எரிபொருள் சிக்கனம், எந்திரச் செயல்திறன், பராமரிப்பு செலவுகள், ஒட்டுமொத்த ஓட்டுநர் அனுபவம் ஆகியவற்றின் மீது வாகன உற்பத்தியாளர்கள், வாகன சங்கங்கள் அல்லது நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து பரவலான அல்லது ஆதாரப்பூர்வமான புகார்கள் எதுவும் அரசுக்கு வரவில்லை. இருப்பினும், ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் எழுப்பப்பட்ட சில கவலைகளை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அவை அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டுள்ளன.
பழைய வாகனங்களில் இ20 எரிபொருளால் செயல்திறனில் குறிப்பிடத்தக்க மாறுபாடோ, அசாதாரண தேய்மானமோ ஏற்படுவதில்லை என்பதையும் விரிவான சோதனைக்கூட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விரிவான சோதனைக்கூட ஆய்வுகள், கள சரிபார்ப்பு, நிஜ உலக இயக்க அனுபவம் ஆகியவை, இ20 எரிபொருளால் வாகனத்தின் செயல்திறனில் பாதகமான தாக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதை நிரூபித்துள்ளன.
அரசின் மதிப்பீடு, சோதனைக்கூட ஆராய்ச்சியை மட்டுமின்றி, நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி, இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288269®=3&lang=1
***
SS/SMB/SH
(रिलीज़ आईडी: 2288685)
आगंतुक पटल : 5