பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதில் ஆச்சார்ய ஸ்ரீ கைலாச சாகர் சூரி ஞானமந்திர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 31 MAR 2026 1:10PM by PIB Chennai

கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதில் ஆச்சார்ய ஸ்ரீ கைலாச சாகர்சூரி ஞானமந்திர் ஆற்றிவரும் பணிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். வரும் தலைமுறையினர் நமது வளமான வரலாற்றோடு இணைந்திருப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்தப் பணியில் முன்னணியில் இருக்கும் இதுபோன்ற பல பேரார்வமிக்க குழுக்கள் நமது தேசத்தில் இருப்பது குறித்துப் பெருமிதம் கொள்வதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதற்காக ஆச்சார்ய ஸ்ரீ கைலாச சாகர் சூரி ஞானமந்திர் செய்து வரும் பணியின் சில அம்சங்களைப் பார்வையிட்டேன். வரும் தலைமுறையினர் நமது வளமான வரலாற்றோடு இணைந்திருப்பதை உறுதிசெய்யும் வகையில், இத்துறையில் முன்னணியில் இருக்கும் இதுபோன்ற பல பேரார்வமிக்க குழுக்கள் நம் தேசத்தில் இருப்பது குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்."

***

(Release ID: 2247210)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2267950) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam