பிரதமர் அலுவலகம்
ராணி லட்சுமிபாய் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2025 7:51AM by PIB Chennai
ராணி லட்சுமிபாய் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
முதலாவது சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த அவரது துணிச்சல், வீரம் ஆகிய பண்புகள் இந்தியர்களுக்கு உற்சாகத்தையும், சுதந்திர வேட்கையையும் தொடர்ந்து அளித்து வந்துள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பாரத அன்னையின் மீது மாறாத பற்று கொண்ட ராணி லட்சுமிபாயின் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். முதலாவது சுதந்திரப் போராட்டத்தில் அவரது துணிச்சல் மற்றும் வீரத்தின் கதை இன்னமும் நாட்டை உற்சாகத்தாலும், உணர்வுகளாலும் நிரப்புகிறது. நன்றியுள்ள ஒரு தேசம் தாய்நாட்டின் பெருமையைப் பாதுகாக்க அவரது தியாகத்தையும் போராட்டத்தையும் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்."
(Release ID: 2191488)
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2249437)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam