நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி மற்றும் கொல்கத்தாவில் சட்ட விரோத தங்கக் கடத்தல் மோசடி முறியடிப்பு: ₹14.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரொக்கம் பறிமுதல், ஆறு பேர் கைது

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAR 2026 10:59AM by PIB Chennai

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ - DRI), வெளிநாட்டு தங்கத்தை இந்தியாவிற்கு கடத்தி உள்நாட்டு சந்தையில் ரகசியமாக விற்பனையில்  ஈடுபட்ட ஒரு கும்பலை கண்டுபிடித்துள்ளது. இந்த நடவடிக்கையின் விளைவாக 14.13 கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

மொத்தத்தில், 13.41 கோடி மதிப்புள்ள 8286.81 கிராம் தங்கம், 19.67 லட்சம் மதிப்புள்ள 7350.4 கிராம் வெள்ளி, 51,74,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டன. உளவுத்துறை தகவல் அடிப்படையில், டிஆர்ஐ அதிகாரிகள், கொல்கத்தாவிலிருந்து ரயிலில் வந்த ஒரு பயணியை, புதுதில்லி ரயில் நிலையத்தில் சோதனை செய்ததில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது .

தொடர்ந்து கொல்கத்தாவில் இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உட்பட மொத்தம் ஆறு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240297&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2240338) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali