பிரதமர் அலுவலகம்
என்எக்ஸ்டி உச்சிமாநாட்டில் தாம் உரையாற்றிய சில காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAR 2026 12:58PM by PIB Chennai
ஐடிவி நெட்வொர்க்கின் என்எக்ஸ்டி உச்சிமாநாட்டில் தாம் உரையாற்றிய சில காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். சுதந்திரத்திற்கான இந்தியாவின் போராட்டம் மற்றும் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு அதன் தற்போதைய தேடல் ஆகியவை குறித்து கவனம் ஈர்த்த திரு மோடி, சுதந்திரத்தை நோக்கி 1930-ம் ஆண்டின் யாத்திரை நாட்டை ஒருங்கிணைத்தது போல் தற்போது வளர்ச்சியடைந்த இந்தியா இயக்கம் 140 கோடி இந்தியர்களின் கூட்டு இலக்காக உள்ளது என்றார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தின் தொடர்ச்சியான பதிவுகளில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“நாட்டில் சாத்தியமில்லாதவை என்று ஒரு காலத்தில் கருதப்பட்டவற்றை தற்போது சாத்தியமான பணிகளாக மாற்ற முடியும் என்பதை இந்தியா இன்று வெளிப்படுத்துகிறது.”
“போர் காரணமாக இன்று உருவாகியுள்ள உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.”
“கடந்த தசாப்தத்தில் எங்கள் அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக மாவோயிச தீவிரவாதம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் பயனாக, ஒரு காலத்தில் அச்சத்தின் நிழலில் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டப் பகுதிகள் தற்போது மேம்பாட்டிற்கான புதிய ஆற்றலைக் கொண்டுள்ளன.”
***
(Release ID: 2239461)
AD/SMB/RJ/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2239666)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada