மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் முதலீடுகள் குறித்த வழிகாட்டுதல்களில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2026 7:17PM by PIB Chennai

இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் முதலீடுகள் குறித்த வழிகாட்டுதல்களில் மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

தற்போதுள்ள கொள்கை பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது:

 

பணமோசடி தடுப்பு விதிகள், 2005 இன் கீழ், முதலீட்டு சமூகத்தால் பரவலாகப் பயன்படுத்தப்படும் நன்மை பயக்கும் உரிமையை நிர்ணயிப்பதற்கான வரையறை மற்றும் அளவுகோல்களை இந்தத் திருத்தம் வழங்குகிறது.

 

பயனடைந்த உரிமை சோதனை முதலீட்டு  நிறுவன அளவில் பயன்படுத்தப்படும்.

 

இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிரும் நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், 10 சதவீதம் வரை மட்டுமே கட்டுப்பாடு இல்லாத பயனடைந்த உரிமை கொண்டிருந்தால், பொருந்தக்கூடிய துறைசார்  முதலீடுகள், நுழைவு முறைகள் மற்றும் தொடர்புடைய நிபந்தனைகளின் அடிப்படையில் தானியங்கி வழி மூலம் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். இத்தகைய முதலீடுகள் மேற்கொள்ளப்படும் போது, முதலீடு பெறும் நிறுவனம் தேவையான தகவல்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறைக்கு கட்டாயமாக அறிவிக்க வேண்டும்.

 

மூலதனப் பொருட்கள், மின்னணு மூலதனப் பொருட்கள், மின்னணு கூறுகள், பாலிசிலிக்கான் மற்றும் இங்காட்-வேஃபர் ஆகியவற்றில் குறிப்பிட்ட துறைகள்/உற்பத்தி நடவடிக்கைகளில் முதலீடுகளுக்கான திட்டங்கள் 60 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.

 

இது போன்ற தருணங்களில், முதலீட்டாளர் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் மற்றும் கட்டுப்பாடு, இந்தியக் குடிமக்கள் மற்றும்/அல்லது இந்தியக் குடிமக்களால் சொந்தமாகக் கட்டுப்படுத்தப்படும் இந்திய நிறுவனங்களிடம் இருக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237806&reg=3&lang=1

(Release ID: 2237806)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2237920) வருகையாளர் எண்ணிக்கை : 115