பிரதமர் அலுவலகம்
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 8:48AM by PIB Chennai
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், சிறந்த நிர்வாகி, உத்தியுடன் கூடிய சிந்தனையாளர், சுயராஜ்யத்திற்கான வீரராக திகழ்ந்த்தாகவும் அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
சிவாஜி மகாராஜாவின் துணிச்சல் தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும், அவரது ஆட்சி வழிகாட்டும் ஒளியாகச் செயல்படுவதாகவும், அவரது நீதி, சுயமரியாதை உணர்வு ஆகியவை இன்றும் கூட சமூகத்தை வலுப்படுத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜா எப்போதும் அனைவரின் நலனையும் அனைத்திற்கும் மேலாகக் கருதினார் என்றும், அவர்களின் பாதுகாப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை, தலைமுறை தலைமுறையாக இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த நாளில், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராகவும், சிறந்த நிர்வாகியாகவும், உத்தியுடன் கூடிய சிந்தனையாளராகவும், சுயராஜ்யத்திற்கான வீரராகவும் திகழ்ந்த அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது துணிச்சல் நமக்கு உத்வேகம் அளிக்கட்டும். அவரது ஆட்சி நம்மை வழிநடத்தட்டும். அவரது நீதியும் சுயமரியாதை உணர்வும் நமது சமூகத்தை வலுப்படுத்தட்டும்.”
"சத்ரபதி சிவாஜி மகாராஜா எப்போதும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். எனவே, அவரது வாழ்க்கை இன்றும் இந்தியாவிற்கு வழிகாட்டும் ஒளியாக உள்ளது."
***
(Release ID: 2230040)
AD/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2230096)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam