உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எல்லைப் பாதுகாப்பு முதல் இக்கட்டானத் தருணங்களில் மக்களுடன் துணை நின்று உதவுவது வரை, சஷஸ்திர சீமா பல் படை எப்போதும் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

प्रविष्टि तिथि: 20 DEC 2025 9:23AM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அதன் நிறுவன தினத்தையொட்டி  வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

சஷஸ்திர சீமா பல் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அதன் நிறுவன தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகள். நமது எல்லைகளைப் பாதுகாப்பது முதல் நெருக்கடியான தருணங்களில் மக்களுடன் உறுதுணையாக நின்று உதவுவது வரை, சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படை எப்போதும் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. பணியின் போது தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த  தியாகிகளுக்கு வீர வணக்கம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206863&reg=3&lang=1

***

AD/SV/RJ


(रिलीज़ आईडी: 2206966) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Kannada , Malayalam